Thursday, 5 September 2013


கோணங்கி "த" நாவல் 
-----------------------------------------------------

ஓவியம்

(ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

சேவலின் எலும்புவாக்கு இன்றி வேறொரு உடலுக்குள் இன்னொரு உயிர் செல்லாது என்றான் மை இருட்டில் இருந்த ஒடியன். கல்லை அலைந்தொழிக்கும் ஆறு உறுமியது. வெகுண்டெழும் பேராந்தைச் சேவல் ஒடியன்ம லையில் இருந்து உருளும் ஓசையில் மாறிமாறி எதிரொலி. முடிவற்ற வட்டவட்டங்களாகச் சுற்றிசுற்றி வந்த குருட்டுச் சேவலுக்கு நண்டின் ஊணை ஊட்டிய நெற்றொடியன் கட்ட ஒடியனோடு தலைமுறை பலவாகியும் வயதுமாறா தேகஒளியிழக்காமல் வாழ்ந்தனராம். முன்னரே உறங்கி முன்னரே சேவலுடன் எழுந்துவிடும் பழக்கம். ஒடிமலையில் மேழகத்தகரோடு கிடாயோடு நாய்களும் சுழன்று திரியக் கடுவா கிடந்துபோன கல்லளைகளே இவர் தம்குடி. அங்கே தேடிவந்த ஜாடிக்காரர் கூட்டம் ஒடியன் கல்லளைகளிலேயே இராத்தங்கல் ஆகாது. பல்லியடிப் பக்கேட்டு தள்ளியே வருகிறார்கள். மயிரடர்ந்த தோற்கட்டினை தழும்புகள் மூடும். கான்திரியும் பூருவ இருடி உடல்மேல் பூக்கள் குமிழ்வதைப் பார்த்தான். சிவலைப் பறவையின் தலையும் றெக்கைகளும் ட்ராகனின் வாலையும் இருகாலையும் நெருப்புயிர்க்க ஓடித்தாக்கும் பூதவேதாளப் புள்ளுரு இந்த ஒடி. தகர்விரவிய செம்மறித்திரள்வெள்யாட்டுத்திரளோடேகலந்துகட்டிகொம்புகள்முட்டிஒடியும்.செம்மறிக்கிடாயின் கொம்பெனத் திருகிக் கடைசுருண்ட தலைமயிர் சுருளும் புள்ளிகளும் ஒடியர் தோற்றம் யாரை விடவும் கட்டையானதாம். ஒடியனும் சொக்கையும் ஒன்னாத்தூங்கியதில் எல்லாக் கலையும் மயங்கி இருக்கும். இலைச்சாயம் பூசிய கல்லளைச் சித்திரமரபு தூங்கும் இருட்டில் கரையும்.ஒருவர் தூங்கியே ஓவியத்தைப் பார்த்துவிடலாம். கபாலம் சித்திரத்தின் ஒருபகுதி. வேறுவேறு வகையினவாய் ஒடிமலைவாழ் வருடைகளின் கொம்புகள் பொருந்திய இளையதகர்களின் ஒலிமுட்டி எழுந்துநிற்கும் தற்கணச் சிற்பம்.ஒடிந்தகொம்பும் செம்மறித் திருக்கை மோதி உடைந்த சிற்பம் எரியும் வெளிச்சம். மேழகத் தகரும் ஞமலியேற்றையோடு குதித்து விளையாடினாலும் தூங்கும் கட்டஒடியனை எழுப்பமுடியவில்லை. இருடிமேல் குக்குட சர்ப்பம் கால்பதிக்க நாசிமேல் சிறகுவிரித்து புரூரம் விண்பறக்கும் இரத்தநரகி நீரில்படாமல் பறந்தவாறு பனந்தோட்டைச் செருகி வெறியாடும் குரவைக்கூத்திலும் அயர்ந்து தூங்கினான்.

வாதை ஒலிக்கும்ஒடியன்பாதை தெரிந்தும் தெரியாத காலங்களில் பயணிப்பது. இந்த ஒடியன் தன் குத்திட்ட பார்வையால் ஒருவரை உற்றுப் பார்த்த உடனேயே இந்தவெளி எந்தவெளியில் இருக்கிறதென்று காலக்கணிப்பிற்கு அப்பால் சலனமுறுவர் எனச் சொன்னதும் காக்கை.

ஒடியன்அகலவிழிகளால்நேரத்துக்கொருஉணர்பரப்பில்அலைபாய்வதுசட்டெனப்புலனாவதில்லை.அவனைப் பார்த்ததாகச் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.

ஒடியனுக்கு மையலுறத் தெரியாது. இயல்பே குழந்தை. அதிகவயதிலும் குழந்தையாகவே வாழ்ந்தான். ஒடியன் பலநாள் தூங்குவான். தானா விழுந்த கல்மரங்களில் இருக்கிறான். நீண்டகால தேரைவிழுந்த கல்லினைச் சிற்பிக்கு ஆகாது. கல்லில் தேரை இருப்பது ஒடி இடம். தேரையின் ஈரஒடுக்கம் ஆழக்கல்லுக்குள் மோனத்தில்இருப்பதும் சிற்பம்.. தேரையைக் கலையாக்கினான். அனாதைப் பிணங்களில் கபாலம் எடுத்து சித்திரகபாலமாக்கும் ஒடியனைப் பயந்த்து காடு. இல்லாதவர்களும் தூங்குகிறார்கள் ஒடியனோடு. அணிகலன் நெகிழ விம்மியழும் பேய்மகளிர் கடுங்காற்றில் பொற்காசுகள் உதிர்ப்பக் கூடிவருகிறார்கள். பாம்பு ஓடிநெளியும் ஆறறல்மணலில் கால்பதித்து வர இடைஇடை அழிப்பாங்கதை. அறல் மணலிடத்தே சேவல் பாதங்கள் செறிந்துள்ளதை உற்றாள் ஒருத்தி. செல்லும்வழி இருட்டில் சித்திரகபாலம் ஒடியன்குகை. இறந்தவர்களே காணமுடியும். ஒவ்வொரு கபாலமும் ஒரு குகை. குடியத்தில் சித்திரமழிந்த கபாலத்திரள். அந்தமலைக் கற்கருவிகள் விழுந்துகிடக்கும் சிற்பப் பட்டறை. கபாலத்தோடு கல்லாயுதம் இணைத்தால் இசையும் சித்ரகபாலமும் தோன்றும். உறக்கத்தில் காமமும் பிறழ்வும் ஆழத்தில் நிர்வாணமாய்ச் செல்கிறார்கள். மிருகங்கள், தாவரங்கள் உடுக்களோடு சேர்ந்திருக்கும் இடைவெளியில் ஒடி தூங்குகிறான். உடுக்களுடன் ஒடியன் தூக்கம் வேகமானது. நட்சத்திரங்களின் ஒளிவருடங்களில் சந்திக்கிறான் உன்னையும். மிகப்பெரும் அந்தகாரத்தில் இருளிப்படர்ந்து துயில்தல். யாரும் பார்க்காத இருட்டுதான் உறக்கம். அது தியானம் மருந்து அபினுக்குள் இருக்கும் தூக்கம். இந்த ஒடியனுடைய பிரதியை அரிதுயில் நிலைக்குக் கொண்டுசெல்வதன்மூலம் ஜாடிக்காரி பாலத்தீனா “தி 'காக்கரீஸ் அன் க்ரோ ஆஃப் ஒடியன்” நூலைத் திறக்கிறாள். அவளால் காணமுடியவில்லை. ஒல்லாந்த மாணாக்கியரும் திறக்கமுடியவில்லை. டாக்டர் நிக்கோலஸ் துல்ப் ஓவிய இருட்டிலிருந்து மெய்யொளியில் மெல்லப் படர்கிறார் ஒடியன் தூக்கத்தில். நிறங்கள் உறக்கத்தை நோக்கி மெய்யுருகி உருவழிந்து சிருஷ்டியாவதை உணரக்கூடும். திறந்தவிழிகளால் கலையைப் பார்க்கமுடியவில்லை. மூடிய இமைமீது கலை வரையப்படும். கண்ணைத் திறந்தால் கலை மறைகிறது. குருவாடிக் கழுதையைவிட வண்ணானின் சாயம்போன காட்டுத்துணிகளின் கிழிசல் பட்டும்படாமல் ஒருங்கிசைவில் சித்திரத்துகிலுக்கு முந்திய எச்சமாகிறது. சொக்கை வண்ணானும் கட்ட ஒடியனும் செம்மறிக் கிடாச்சண்டைக்கு ஏகும் மலைக்கிராமப் பாதை. கழுதையுடன் தூங்கிநடக்கும் ஒடியனை மலைக்குத் தெரியும். ஆளில்லாத இடத்துக்குச் செல்லும் குருவாடிக்கழுதைமேல் ஒடியன் சேவல் போருக்குச் செல்கிறான். குழிகள் சுழன்று வருகிற ஆழ்ந்த காயங்கள் உடைய ஆறு, முடுகரைக்கு அந்தப்பக்கம் ஒடுமரங்கள் நிறைந்த மலையூர், அருகில் ஒடுங்காடு தான் அவன் பூர்வமண்மம். ஆசினிப்பலா மரங்களையுடைய ஓடுங்காடு பார்த்து கெக்கலித்தான் ஒடி. அம்புக்கட்டுகளோடு இடுப்பில் துடி தொங்கும்.... துடித்துத் தட்டிய துடிக்குரல் கேட்டு பட்சிகள் கலைந்துபறந்தன சுற்றி. ஓடுங்காடு கடந்து அவன் உடல்போகாமல் நடந்தபடி தூங்கவாரம்பித்தான். தூக்கத்தில் நரைக்கொடி மணம். ஒடியல் வேரடியில் காலம் தூங்கிக்கொண்டு இருந்தது. பழங்கதையின்படி சிடாயுவின் வழித்தோன்றலாய் சிறு அரசன் புள்ஒடி விநதையைச் சீயாளென்பான். அரணன் அரம்பையைக் கூடியதில் சம்பாதியும் சிடாயும் பண்டு இருந்தே கழுகுலகம் மனிதரைக் கடந்திருப்பதில் புள்ளுநூல் அறிவீர். பகுத்தறிவின் கிரகச் சுழற்சியினை சிடாயு தம் இரு சிறகால் தொட்டு நிறுத்திவிட உள்ளே பெருஞ்சுழற்சியாய் ஒடிகிரகத்துக்கு வளைந்து பறப்பதில் வலியபரந்த சிறைநிழலில் செல்லும்படி ஆகாயநெறியே நாம் இவ்வேளை பறந்துகொண்டு இருக்கிறோம். சிடாயுடலில் கூடுமாறிச்செல்லும் பலவின்பால் பிறவிகளில் ஒடி இனவரைவியலில் “தி க்ரோ ஆஃப் ஒடியன்என்றழைப்பதில்பால்த்தீனாதம்வழிவந்தஜலப்பிரளயத்தில்திக்ரோஆஃப்நோவாவிலிருந்து கிருஸ்தவ ஊழியுடன் முதல் காக்கையை படகிலிருந்து நோவா பறக்கவிட்டதில் தொடங்கிக் கடந்து நேரில் தேடிப்போக ஆவலுற்றாளாம். மேலும் ஒடி கல்லளை ஓவியங்களில் அதீதப் பழம் புள்ளுக்களும் புராண தாந்த்ரீக விதவை அரக்கி தண்டகாரண்யத்தில் ஜனஸ்தானமென்னும் இடத்திற் குடிபுகுந்த்தால் அவள் இரத்தநரகி, பூருவ இருடி மூக்கையும் காதுகளையும் அறுத்து சிக்ஷித்து முலையறுத்த இரத்தக்குகை மடு தீராமல் சித்திரம் வழிந்தது. வாதையுறு மூதாய் அவகதியடைந்த துயர ஊற்று எம் கலையாவதென ஒடி சித்தரித்த எத்தீய ஆவிகளும் தனியுலகாகும் பரப்பில் வெளியே தொலைவில் சூர்ப்பனகை மூக்கில் ஒழுகிய குருதி உடுக்களாய் சிதறிச்செவ்வொளிகாட்டி யாவும் விலங்குருப் புள்ளு எலும்புகளின் சேட்டை. ஒடிப்புதிரில் கல்லாத்தி எனும் இளம்பறவை எந்நேரமும் பாடுகிறது யாருக்காகவுமின்றி. கல்லாத்திப் பறவைக்கு பவளக்கூண்டு முடைந்து அழுகுரலிடும் பாடலை திரும்பவும் பாடினான் கட்ட ஒடியன்.
அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்
--------------------------------------------------------------------------

                                       (ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

கணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.







மனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்களில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.

அவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.



மனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.

அவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.

அவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.

கோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

நவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.

                                                                 யாழன் ஆதி
                                                              -----------------------

Monday, 13 August 2012

கோடுகளால் தீட்டப்பட்ட நவீன மூலம்


                                                                                (ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)



மேலும் இறுக்கமானதாக மொழி மாறிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஒரு கவிதையின் ஓர்மையோ அல்லது அது சார்ந்த எழுத்தின் கூர்மையோ அன்றி நேரிடையாகச் சொல்லல் என்னும் தன்மைகளைக் கடந்து வாசக படைப்பனுவத்தைக் கோருகின்ற பிரதிகளை உருவாக்கும் மொழியாளுமைகள் நிறைந்தும் அதனால் அகவுணர்வுக் கோட்பாடுகள் மிகைந்தும் கனவின் நீட்சியாக நிலைக்கும் அதிரூபத்தின் சிறப்புகளை எழுதும்போது அதே நனவிலி மனநிலையில் இருந்துகொண்டே எழுதுவதும் சிறப்பெனவேக் கருதப்படும் காலமாக இக்காலம் மாறிவருகிறது. பின் நவீனத்துவக் கோட்பாடுகள் தனக்கான கட்டுகளை உடைத்துக்கொண்டு விளிம்பின் இடப்பெயரலாக மையத்தை நோக்கி நகரும் கட்டுடைத்தலை நிகழ்த்தும் காலத்தின் தீவிரம் நிகழும் தருணம் இது.




                             

எழுத்தின் உளவியல் என்பது அது சார்ந்து இயங்கும் தனிமனித பின்புலம் மட்டுமின்றி அத்தனிமனம் ஆற்றுகின்ற அசிரத்தையான அல்லது சிரத்தையான செயல்களின் ஊக்கங்களும் கொண்ட ஒரு அமானுஷ்யம் தான். அது பிறகான பின்விளைவுகளை நிகழ்த்தும் கூறுகளை அதன் போக்கில் உணர்பவர்களாகவோ அல்லது அதை பின்பற்றுபவர்களாகவோ அல்லது அதன் மீது எந்த விதமான எதிர்வினை ஆற்றாதவர்களாகவோ மாறிவிடுகிறார்கள். வாசிப்பு என்னும் செயல்பாடு வாசக மனத்துள் நிகழ்த்தும் கோரல் முழுக்க காத்திரமான செய்தி சேகரிப்பு என்னும் நிலையும் இருக்கிறது. அதையும் தாண்டி அப்பிரதி ஆற்றுகின்ற காரியம் என்பது தனிமனித மனமாறுபாடு. எழுத்துப் பிரதிகள் ஆற்றுகின்ற இப்பணியினை ஓர் ஓவியப் பிரதி உருவாக்க முடியுமா?

ஒவியப்பிரதிகள்  மிகவும் நுட்பமானவை. அவற்றின் இயங்குதளம் என்பது மனித வாழ்வின் விழுமியங்கள் தோற்ற இடம். கோடுகளால் உருவாக்கப்பட்ட நவீன ஓவியங்கள் பார்வையாளனை மிகவும் வலிந்து தன்னுடள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையன. ஒவ்வொரு தீற்றலும் அதற்கான செம்பொருளைத் தாங்கிக் கொண்டு தன்னைக் காணும் கண்களை அதனோடு தொடர்புடைய மனித மனத்தோடும் உடலோடும் வினையாற்றக் கூடியன.ஞானப்பிரகாசத்தின் கோடுகளும் அத்தகையதே. பார்வையாளனை இன்னொருமுறை படைக்கவைக்க வல்லன அவரின் கோடுகள். அந்தக் கோடுகளின் மெல்லியத் தன்மையும் தடித்த தன்மையும் ஓவியத்திற்கான பரிமாணங்களை பார்வையாளனைக் கொண்டு செல்ல வேண்டிய இட்த்திற்கு சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்லக் கூடியன.

சமீபத்திய இதழ்களில் இடம் பெறும் அவரின் நவீன ஓவியங்கள், நுண்மையாக மரபியலைத் தன்னுள் வைத்திருக்கும் விசித்திரம் கொண்டவை. சமீபத்தில் அவரால் வரையப்பட்ட நவீன எழுத்தாளர்களின் ஓவியங்கள் கோடுகளாலானவை. அந்தக் கோடுகளை அவர் பயன்படுத்தியிருக்கும் லாவகம் என்பது அலாதியானது. ஓர் இலக்கிய வாசகத் தளத்திற்கு அவர்கள் வாசித்த ஆளுமைகளின் படைப்பூக்கம் என்பதை அவர்களின் உருவ உருவாக்கத்தில் நாம் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்களில் அறியலாம். குறிப்பாக எழுத்தாளர் கோணங்கியின் ஓவியம் இருட்டுக்குள்ளிருந்து கிள்ம்பும் கோடுகளால் ஆனது.அவருடைய பாதிமுகம் ஒளியிலும் இருண்மையிலும் இருக்கும் அது அவரின் படைப்புகளைப் போல இருண்மைப் பொருந்தியதாகவும் பூடகமானதாகவும் அமைந்திருப்பது இயற்கையாக அமைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் குட்டி ரேவதியின் ஓவியம் வெளிச்சக் கோடுகளால் ஆனது. அதுவும் அவரின் படைப்பு வெளியினைப் போன்றதுதான். உடல்மொழி அரசியலை நிகழ்த்தும் அவரின் ஆக்கங்களை அவருடைய ஓவியத்திலேயே கொண்டுவரும் யுக்தி ஞானப்பிரகாசத்தின் புதிய பாணியிலானது. சுகிர்தராணியின் முகத்திரட்சியை அவர் கோடுகளால் உருவாகியிருப்பது மிகவும் நேர்த்தியானது எனலாம்.

                                                                  (ஓவியம் - ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)

ஞானப்பிரகாசத்தின்  அரூப வகை ஓவியங்கள் (abstract) அவர் வண்ணங்களில் உருவாக்கினாலும் கருப்பு வெள்ளையில் உருவாக்கினாலும் மிகவும் ஆதர்சனமான அவதான்ங்களைக் கொண்டிருப்பதாக நாம் கொள்ளலாம். அவரின் புனைவுகள் கற்பனைகளைத் தாண்டி பார்வையாளனின் நனவோட்ட்த்தின் நரம்பு மண்டலங்களில் பாயக் கூடியன. எருது, பசு, புலி, பூனை போன்ற குறியீட்டு சித்திரங்கள் அவற்றின் புறவயம் சார்ந்த தேவைகளை உருவாக்கி அந்த்த் தேவைகளை அவை சுகிப்பதாகவும் அதே நேரத்தில் அதை மீறிய ஒரு குறியீட்டுத் தன்மை அவற்றுள் நிகழ்கிறது. இரண்டு மாடுகள் மனித உருவில் மோதிக் கொள்வதும் அவற்றுக்குப் பின் புறம் பாம்புகள் சூழ்வதும் மிகவும் முக்கிய அரசியலைப் பேசுகின்றனவாகப் படுகிறது. பாம்புகள் தீமைக்கும் மாடுகள் உழைப்பிற்குமான குறியீடாக இயங்கும் மனநிலையில் அந்த ஓவியப் பிரதி சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு உழைக்கும் வர்க்கங்களையும் அவற்றிற்குப் பின் உள்ள பாம்புகள் அவற்றிர்கிடையேயான தீராத பகையாகவும் காட்டுகின்ற சிற்ப்பு ஞானப் பிரகாசத்தின் தன் அடையாள்ம் என்று சொல்லலாம்.

ஆணிற்கும் பெண்ணிற்குமானப் பிணைபபை அவருடைய ஓவியம் அற்புதமாக காட்டும். ஆணின் அதிகாரத்தைக் குறிக்க ஆண் சித்திரத்தின் வாய்
அகண்டிருப்பதும் பெண் உருவத்தின் வாய் மூடியிருக்கும்படியும் வரைந்து அந்த ஓவியத்தின் அரசியலை உயிர்பெற வைக்கிறார். தாயின் மார்பில் பால் குடிக்கும் மீன் படம் பார்வையளனுக்கு அதிர்ச்சியைத் தந்து அதற்கான அர்த்தத்தை அடைகிற வழியைக் காட்டுகிறது. இப்படி ஞானப்பிரகாசத்தின் நிறைய ஓவியங்களைச் சொல்லலாம்.
இந்த ஓவியங்களில் அவர் கோடுகளுக்குப் பின் பயன்படுத்தும் நிழல்தன்மை
சில இடங்களில் அடர்ந்தும் சில இடங்களில் நீர்த்தும் இருப்பது ஓவியத்தின் கனத்தை இன்னும் கூட்டுகிறது. மூன்று மாடுகள் ஓவியத்தில் ஒரு மாட்டின் வாலே பாம்பாக மாறி மாட்டை விழுங்குவதும் இன்னொரு மாட்டின்  பின் கால்கள் இரண்டும் பாம்புகளாகி மடியில் பால் குடிப்பதும் கற்பனையின் உச்சமான மாயவினோதம் இத்தகைய மாய வினோத ஓவியங்கள் காட்டும் அகநிலை தனிமையின் கோரத்தையும் அது தரும் வலியின் கொடூரமும் இன்னும் நம் கண்கள் முன்னால் அலைகிறது. உதிர்கின்ற இலையைப்போல மிகச் சாதாரணமாக அவரிடமிருந்து வரும் ஓவியக்கோடுகள் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் தன்மையனதாக இருக்கின்றன.

மாடுகளும், மனிதர்களும் மீன்களும் பாம்புகளும் என்னும் சுழற்சியில் ஞானப் பிரகாசம் கட்டும் உளவியல் நிலையானது எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு அவைப் புலப்படாத ரகசிய புற்றுகளைக் கட்டிக் கொண்டே செல்கிறது.

இப்படி மாய எதார்த்த வாத வகையான ஓவியங்களில் தனக்கென தனி முத்திரையினைப் பதிக்கின்றன.

அடுத்ததாக அவரின் நீர்வண்ண ஓவியங்கள். முடிவுறாத கணத்தினை தன் தூரிகையின் மூலமாக அவரால் பிடிக்கமுடிகிறது, கிட்ட இருக்கும் பாறையின் அருகில் நின்று கொண்டு யாருமற்ற கடல் நீர் வெளி முழுக்க கேன்வாஸில் அவரால் கொண்டுவரும்  ஓவியம் அலாதியாநனது.

நீர்வண்ணத்தில் அவர் வரைந்திருக்கும் பெண்ணுடல்கள் ஓர் ஓவியக்கலைஞனின் பார்வையும் அவ்வுடல்கள் பேசும் தனித்த மொழியும் பார்வையாளனை வசியம் செய்யக் கூடியவை.நிலக்காட்ட்சியில் பொங்கும் வண்ணங்கள் அவர் தூரிகைகளின் செல்வகை ஆகியவி சிறந்த கலைஞனுக்கான அடையாள வேலைகள் எனலாம்

இணையத்தில் அவருடைய ஓவியங்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. அக்ரிலிக் ஓவியங்களின் வண்ண அடர்த்தியும் அவை நிர்மாணிக்கும் அரூப தன்மைகளும் நவீன ஓவிய வகைமையின்  வேர்களாக இருக்கும். கொட்டும் அருவியாய் கொட்டும் வண்ணங்களில் வழியும்  உருவங்களை உருவாக்குதல் அவற்றின்மீதான தூரிகை ஆளுமையை செயற்படுத்தி ஓவியங்களைத் தொழிற்படச் செய்யும் ஞானப்பிரகாசத்தின் ஓவியங்கள், அனைத்து வகைமைகளிலும் அவற்றிற்கான இடத்தைக் கோரி நிற்கக் கூடியன.


                                                                (ஓவியம் - ஞானப்பிரகாசம்  ஸ்தபதி)

அடர்ந்த கருப்பும் மெல்லியக் கோடுகளுமாக அவர் நிகழ்த்தும் சில ஓவியங்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்குமானத் தொடர்பினை தன்னியல்பாகக் காட்டுகின்றன. விலங்கௌகள் மனிதர்களைத் தாக்குவதும் மனிதம் அதை எதிர்ப்பதும் இனவரைவியல் அடிப்படையிலானது என்றாலும் மரபார்ந்த விலங்குக்குறியீடு என்பது மானுடத்திற்கு எதிரான தீமைகள் என்றும் அது சமூகம் சார்ந்த தீமைகளாகவும் தனிமனம் சார்ந்த தீமைகளாகவும் இருக்கலாம்  அவற்றைக் கொல்வதும் அல்லது அடக்குவதும் மனிதர்களுக்கான வேலையாகவும் தேவையாகவும் இருக்கிறது என்பதையும் அவருடைய ஓவியங்கள் காட்டுகின்றன. மாடானாலும் புலியானாலும் அவற்றின் குறிகளைப் பிரதானப் படுத்தும் ஞானப் பிரகாசத்தின் ஓவியப்பாணி என்பது நோக்கத்தக்கது. ஒரு நவீனக் கவிதைக்கான இருண்மையும் உள்ளுறையும் இணைந்திருக்கும் அவருடைய இத்தகைய ஓவியங்கள் காலத்தின் சாட்சிகளாக  மாறுவதற்கான சாத்தியங்கள் பல இருக்கின்றன.

பிரபஞ்சத்தின் அத்தனை உயிர்களும் ஆண் பெண் பேதமின்றி அவை வாழத்தகுந்த இடமாக பூமி இருக்கிறது. அவற்றிற்கான வாழ்வியல் தேவைகளை இன்னொரு உயிர்க்குழுமம் சுரண்டாத வரை இயங்கியல் மிகவும் பழுதற்றதாக இருக்கும். இல்லையென்றால் சூழல் பிரச்சினை, ஆண் பெண் பிரச்சினை, சாதி மதம் என்னும் சமூகப் பிரச்சினைகள் எல்லாம் இந்த அண்டத்தின் அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும் என்னும் பொருள் உணர்த்தும் பல ஓவியங்கள் ஞானப்பிரகாசம் என்னும் மனிதனின் ஆசைகள் அவன் கலைஞனாக இருக்கும் தருணத்தில் எப்படியெல்லாம் வெளிப்பட வேண்டுமோ அப்படியானதொரு வெளிப்பாட்டு முறையிலான ஓவியங்களாக இருக்கின்றன.


மௌனத்தின் மொழியினூடாக செல்லும் இவரின் தூரிகைகளும், சார்கோல்களும் பென்சில்களும் வண்ணங்களும் இன்னும் தூரங்களை நிர்மாணிக்கும்.

                                - யாழன் ஆதி       


Wednesday, 20 June 2012

தேடுகை

(Drawing - Gnanaprakasam Sthabathy)



எப்போதும் அலையும் காற்றின் இயக்கத்தில்
சுழன்றுகொண்டிருக்கிறது அகன்ற சருகொன்று
சிவந்த கூரிய அலகுடையப் பறவை
பிய்த்துச் சென்ற செம்மரக்கட்டையின் ஓரிழையை
அது தனது கூட்டுக்குள் பதுக்கி வைக்க
அதன் பிம்பம் எதிரொலிக்கும் மாலைநேர வானில்
மேகங்கள் முப்பரிமாணக் கூடல் காட்ட
மோகினி ஒருத்தி ஆடைகளற்ற பின்புறத்தைக் காட்டி
நடக்கிறாள்
விலகாத தவிப்புகளடங்கியப் பெட்டியை வைத்துக்கொண்டு
சுமையின் வலிதாளாமல் கால்கள் இடர
கண்களிலிருந்து வழியும் காமத்தைத் துடைத்துக்கொண்டே
நடக்கிறான்
யாருமற்றத் தெருவில்
புணர்ந்துத் தீர்க்கப்பட்டவர்கள் நிறைந்த அந்தத் தெருவின்
புராதனத்தில் வீழ்ந்து கிடந்த வாளொன்றை எடுத்து
அவன் பெட்டியை உடைக்க
அதிலிருந்து கிளம்பிய புகையில்
இருந்தன அவன் முன்னோர்களின் கண்கள்.

யாழன் ஆதி


Sunday, 10 June 2012

Vincent van Gogh

                                                                Artist : Vincent van Gogh

 Artist : Vincent van Gogh
Born: 30 March 1853; Zundert, Netherlands
Died: 29 July 1890; Auvers-sur-Oise, France
Field: painting
Nationality: Dutch


    One of the most famous painters in history, Vincent van Gogh was a Dutch neo-impressionist painter, who produced a vast number of the most recognizable artworks of all time. Van Gogh was a serious, silent, and thoughtful child, who did not attend art classes until he was secondary school. With a natural talent for art, he was contracted quickly out of school to work with an art dealer in The Hague, and later transferred to a dealer in Brixton, in England, where at age twenty he was making more money than his own father. According to his sister in law, this was the happiest time of his life.

He was fired from a job in France, after which he had to return to England for unpaid work. He worked many small jobs until he realized that his calling was in the ministry, and he traveled to Amsterdam in 1877 to study theology. Unfortunately for Van Gogh, he failed his entrance exams to the university, as well as several missionary posts. His tribulations in the missionary field came to an end when he returned home to his parents. During this time, after a particularly bad argument, Van Gogh’s father made inquiries about having his son committed to a lunatic asylum.

He returned to Cuesmes, Belgium, in 1880, and resigned himself to the life of an artist, enrolling at the Academy of Fine Art in Brussels, studying art in earnest. His years as an art student were rocky at best. During the time period between 1880 and 1886, Van Gogh had unsuccessfully proposed marriage a number of times, impregnated and abandoned at least one woman, suffered the death of his father, and was in ill-health due to a diet of bread, tobacco, and coffee. Nevertheless, he matriculated from the Academy of Fine Arts in Antwerp in 1886.

He later traveled to Paris, where he met and painted with many prominent impressionist painters, and later to Arles, where he was enthralled by the bright light of the South of France. Throughout this time he was a prolific painter, producing many of his best known works, and cavorting with famous French impressionists. During his stay in Arles, Van Gogh implored Paul Gaugin to lie with him in Arles so they could paint together. Gaugin relented, but did not stay long, as his relationship with Van Gogh was becoming increasingly strained. In December of 1888, Van Gogh, in a paranoid state, confronted Gaugin with a razorblade. He later fled in a panic to a nearby brothel, cutting off a small portion of his earlobe, giving it to a prostitute. He spent months in recovery, suffering hallucinations and paranoid dilemmas, and was finally committed in an asylum in 1889.

He returned from the asylum to seek treatment with Dr. Paul Gachet, and later returned home. His mental state, however was seriously debilitated, and he suffered from hallucinations and severe depression. In July of 1890, he walked into a field and shot himself in the chest. He survived the immediate wound, and walked back to a nearby inn. He died two days later, at the age of 37.

Although his work was not immediately recognized, his fame grew throughout the 19th century, and he is now one of the most famous painters in history, and recognized for important contributions to modern art.
 

 Irises.

Van Gogh painted Irises the year before his death, in 1889, during his stay at the asylum in Saint Remy de Provence. Van Gogh often used painting as a way to keep himself from going insane, and this painting was one such work. It was painted before his first mental attack at the asylum. Van Gogh sent the painting to his brother Theo, who immediately sent it to the Salon des Independants that same year, where it was exhibited and highly praised. It continued to set high price records at auction until it was sold to the J. Paul Getty Museum in Los Angeles in 1990.
 

நித்திய யெளவன முயல்குட்டி

                                                       (Painting - Gnanaprakasam Sthabathy)

பின்னிரவில் அறைக்குள் நுழையுமவள்
மெத்தையின் மீது படுத்துக்கொண்டு
வான் பார்க்கும் பாதங்களை
முன்பின்னாக ஆட்டிக்கொண்டே
ஏதேனுமொரு புத்தகத்தை வாசிக்கிறாள்.
ஒழுங்கற்ற அவளது அறைக்குள்
சிதறிக்கிடக்கின்றன புத்தகங்கள்.
அறையின் மேல்கூரையில் நகரும்
சுவர்ப்பல்லி பூச்சியை நோக்கி
நாவை நீட்டுகிற கணத்தில்
தன் ஆடை களைந்து நிர்வாணம் அணிகிறாள்.
அவளது யெளவனத்தில் விழுந்தெழுந்து
ஓடுகின்றான் புத்தகத்தினுள்ளிருந்து
வெளிக்குதித்த பதின்பருவத்தவன்.
களைப்பின் மிகுதியில் கண்ணயர்கிறவள்
யாரோ ஒருவனின் உலகிற்குள்
முயல்குட்டியாகி தாவி            தாவி
ஓடுகிறாள்.
படுக்கை விரிப்பில் புரள்கிறது
ஊனப்பூச்சி.

-நிலாரசிகன்

பிசுபிசுத்த கனவுச் சித்திரம்

(Painting - Gnanaprakasam Sthabathy)


என் நித்திரையை அவள் வலியுறுத்திய பொழுது
இமைகளிடையே அமர்ந்திருந்த ஒரு சொல்லில்
தீட்டிய ஓவியத்தின் புருவமிருந்தது
பாதி மூடிய கண்களில் வாக்கியங்கள்
நீண்டிருந்தன தண்டவாளங்கள்போல்
தோன்றிய பெண் அசைய அசைய
தாள்களில் வாத்சல்யம் பெருகி
இலை நுனி வடிக்கும் ஒரு துளி நீராகி
ரம்மியத்தில் வீழ்ந்தேன்
கனவு காண அழைப்பவளின் குரலின்
நிர்பந்தத்தில் இமைதிறவா
உயிரற்றவள் நின்றிருந்தாள்
நெளிவு சுழிவுகளுள் சொற்களஞ்சியத்தின்
மூடியை மூட முற்றுப்பெறாத காட்சியை
கைவிட்டுப் பிரிந்தேன்
வெளிப்புறத்தில் எனக்குப் பதில் அழுத மழை
இருள் விரிப்பில் விழுந்த சிரத்தில்
பிரவகிக்கும் விடுபட்ட சொற்களில்
மனக்கண்ணில் பூர்த்தியாகும்
விழி அலர்ந்து அச்சித்திரம்
அகம் ஒருமித்து எண்ணங்களை கைவிட்டவேளை
அவள் அழைத்திருந்த நித்திரையின் 
ஆழத்திலிருந்தேன்
விழித்திருப்பவனுக்கு நான்
தூங்குவதாக எண்ணமிருக்கும்
நானோ அகக்கண்ணில் இமைத்திருந்து
கண் திறவா ஓவியத்தில்
சொல்லால் விழி திறந்திருப்பேன்
நதி மீறிய கரைவிழுந்த நீர்த்துளிகளின்
வேகத்தில் உயிர் துளிர்த்து
பசலையில் நெளிந்த உயிரிடையில்
விரல்களில் விரகம் வரைந்தேன்
சித்திரக் காகிதத்தில் உடல் நீர் கசிந்து
பிசுபிசுத்த வண்ணங்கள்.

-Iyyappa Madhavan

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...