Wednesday 20 June 2012

தேடுகை

(Drawing - Gnanaprakasam Sthabathy)



எப்போதும் அலையும் காற்றின் இயக்கத்தில்
சுழன்றுகொண்டிருக்கிறது அகன்ற சருகொன்று
சிவந்த கூரிய அலகுடையப் பறவை
பிய்த்துச் சென்ற செம்மரக்கட்டையின் ஓரிழையை
அது தனது கூட்டுக்குள் பதுக்கி வைக்க
அதன் பிம்பம் எதிரொலிக்கும் மாலைநேர வானில்
மேகங்கள் முப்பரிமாணக் கூடல் காட்ட
மோகினி ஒருத்தி ஆடைகளற்ற பின்புறத்தைக் காட்டி
நடக்கிறாள்
விலகாத தவிப்புகளடங்கியப் பெட்டியை வைத்துக்கொண்டு
சுமையின் வலிதாளாமல் கால்கள் இடர
கண்களிலிருந்து வழியும் காமத்தைத் துடைத்துக்கொண்டே
நடக்கிறான்
யாருமற்றத் தெருவில்
புணர்ந்துத் தீர்க்கப்பட்டவர்கள் நிறைந்த அந்தத் தெருவின்
புராதனத்தில் வீழ்ந்து கிடந்த வாளொன்றை எடுத்து
அவன் பெட்டியை உடைக்க
அதிலிருந்து கிளம்பிய புகையில்
இருந்தன அவன் முன்னோர்களின் கண்கள்.

யாழன் ஆதி


No comments:

Post a Comment

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...